உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரி முன்வைத்துள்ள முக்கிய கருத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் முப்படைகளுடைய அதிகாரம் உங்களுடைய கையில் இருந்தது. ஏன் அந்த அந்த காலப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளைப் பலவீனமாக வைத்திருந்தீர்கள் என்ற கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.
IBCதமிழ் ஊடகத்தின் அகளங்கம் என்ற நிகழ்ச்சிக்கு அளித்துள்ள செவ்வியின்போது இது தொடர்பில் அவர் பல விடயங்களை முன்வைத்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, சஹ்ரான் என்பவரை கைது செய்யுமாறு நான் பாதுகாப்பு சபைக் கூட்டத்திலே மீண்டும் மீண்டும் கூறியிருந்த சந்தர்ப்பத்திலும் கூட, கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏன் சஹ்ரானை கைது செய்ய முடியவில்லை?
ஏன் என்னுடைய உத்தரவை நடைமுறைப்படுத்தமுடியவில்லை என்று அப்போது இருந்த பொலிஸ் மா அதிபர், பொறுப்பான அமைச்சர், பொலிஸ்துறைக்கு பொறுப்பான செயலாளர் ஆகியோரிடம் கேட்டேன்.
நான் நினைக்கின்றேன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இது தொடர்பில் விசாரித்தபோது, நான் ஸ்தாபித்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பந்தமான ஆணைக்குழு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த புலனாய்வுத்துறையினர் போன்றவர்கள் இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமான புலனாய்வுதுறையினரால் கொடுக்கப்பட்ட தகவல்கள் எனக்குக் கிடைத்ததாக அவர்களுடைய எந்த ஒரு அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
