உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : வர்த்தகர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவலை மறைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் அவரது இரு மகன்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில், பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்றைய தினம் (15.05.2023) நிராகரித்துள்ளார்.
மேலும், வழக்கின் முன் விசாரணையை எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதியன்று நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு தற்கொலை குண்டுதாரிகள்
பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின்போது, கொழும்பில் உள்ள பிரதான விருந்தகங்களில் தற்கொலை குண்டுவெடிப்புகளை நடத்திய இன்பாஸ் அஹமட் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகிய இரு தற்கொலை குண்டு தாரிகளின் தந்தை ஆவார்.
ஏனைய இரண்டு பிரதிவாதிகளும், சம்பந்தப்பட்ட இரண்டு தற்கொலை குண்டுதாரிகளின் சகோதரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
