ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்; அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்: மட்டு. முன்னாள் முதல்வர் (Video)
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலும் அதன் பின்னணி குறித்தும் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் உயிர்த்த ஞாயிறு அன்று சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 31பேர் உயிரிழந்துள்ளதுடன், 85க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்து ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள தூபி முன்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றைய தினம் (21.04.2023) நடைபெற்றுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்
மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது மெழுகு திரி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. 00 இதன்போது மாநகர முன்னாள் முதல்வர் தெரிவிக்கையில்,
வருடா வருடம் நாங்கள் இந்த பூவில் அஞ்சலி செலுத்தி வருகின்றோம். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணையில் இன்று வரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்று தான் நான் பார்க்கின்றேன்.
அண்மையில் அசாத் மௌலானா என்பவர் ஜெனிபாவில் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது கட்சியைச் சார்ந்த சிலரை அவர் குற்றம் சாட்டி இருக்கின்றார்.
எனவே இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதைச் சரியான முறையில் விசாரணை செய்து உரியக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கம் இவ்வாறான ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கி இருக்கின்றார்கள்.
தண்டனை வழங்க வேண்டும்
இந்த ஏப்ரல் குண்டு தாக்குதலுக்குக் காரணமானவர்களை இனம் கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
அதற்கு ஒரு துரும்புச்சிட்டாக அசாத் மௌலானா வழங்கியுள்ள வாய் முறைப்பாட்டின்
அடிப்படையில் விசாரணையை நடத்தி அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குத்
தண்டனை வழங்க வேண்டும் என நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.




புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
