உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை: இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நிலைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை விடயத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரும், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் ஒரே கருத்தையே கொண்டுள்ளனர்.
விசாரணைக்கு அழைப்பு
இதன்படி, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் ஈடுபாட்டுடன் உள்ளூர் விசாரணைக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவை மேற்கோள்காட்டி திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கர்தினால் ரஞ்சித்துக்கும், ஆயர் பேரவைக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக காட்டுவதற்கு ஜனாதிபதி முயற்சி எடுத்துள்ளதாக அருட்தந்தை பெரேரா இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேர்காணலின் போது ஜனாதிபதி கூறிய விடயம்
ஜேர்மன் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது கூறியபடி ஜனாதிபதி, தன்னையோ அல்லது ஆயர்கள் மாநாட்டையோ சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி, ஒரு வருடத்திற்கு முன்னர் தம்மை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அருட்தந்தை பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam