உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை: இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நிலைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை விடயத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரும், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் ஒரே கருத்தையே கொண்டுள்ளனர்.
விசாரணைக்கு அழைப்பு
இதன்படி, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் ஈடுபாட்டுடன் உள்ளூர் விசாரணைக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவை மேற்கோள்காட்டி திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கர்தினால் ரஞ்சித்துக்கும், ஆயர் பேரவைக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக காட்டுவதற்கு ஜனாதிபதி முயற்சி எடுத்துள்ளதாக அருட்தந்தை பெரேரா இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேர்காணலின் போது ஜனாதிபதி கூறிய விடயம்
ஜேர்மன் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது கூறியபடி ஜனாதிபதி, தன்னையோ அல்லது ஆயர்கள் மாநாட்டையோ சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி, ஒரு வருடத்திற்கு முன்னர் தம்மை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அருட்தந்தை பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

உதவி செய்வதற்காகவே பிறப்பெடுத்த உன்னத ஆன்மாக்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
