சஹ்ரானுக்கு சார்பாக வாதாடிய என்பிபியின் பிரபல அமைச்சர்!விமல் வீரவன்சவின் பகிரங்கம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் சஹ்ரானுக்கு சார்பாக இன்னாள் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மட்டக்களப்பு சென்று வாதாடியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அரசின் முக்கிய புள்ளிகளும் தொடர்பு
சஹ்ரானுக்கு சார்பாக வாதாடிய சட்டத்தரணியான ஹர்ஷன நாணயக்காரவும் கைது செய்யப்பட வேண்டும். அவரும் இதற்கு ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டுள்ளதால்.
ஆனால் சஹ்ரான் தீவிர மதவாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என்று நல்லாட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு தகவல் வழங்கிய புலானாய்வுத் துறை முன்னாள் அதிகாரிகளை கைது செய்வது எவ்விதத்தில் நியாயமானது.

இன்று பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பயத்திலா இருக்கிறார்கள். அந்த பயங்களை போக்கிய வீரர்கள் தான் இவர்கள். இவ்வாறான வீரர்களை செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்படுகிறார்கள்.
பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்தின் ஊடாக பாதுகாப்பு தரப்பினரை பழிவாங்குகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக அரசாங்கமே பாதுகாப்பு தரப்பினரை வலுவிழக்க செய்கின்றனர்.
இன்று இராணுவத்தில் இளைஞர்கள் இணைந்து கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri