சனல் 4 காணொளி விவகாரம்: தீவிரவாதிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் உதவியதாக பிள்ளையான் குற்றச்சாட்டு

Pillayan Tamil diaspora Sivanesathurai Santhirakanthan
By Mayuri Sep 08, 2023 08:10 AM GMT
Report

மனித உரிமை பேரவையின் அமர்வுக்கு முன்னதாக சனல் 4 நாடகங்கள் போன்றவை இடம்பெறுவது வழமை என நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலககெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து சனல் 4 இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு ஆதரவளித்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!! மிகப் பெரும் ஆதாரங்கள் சிக்கின

கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!! மிகப் பெரும் ஆதாரங்கள் சிக்கின

கேள்வி : உங்கள் கட்சியின் பேச்சாளராக பணியாற்றிய அசாத் மௌலானா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் - உங்கள் பதில் என்ன?

சனல் 4 காணொளி விவகாரம்: தீவிரவாதிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் உதவியதாக பிள்ளையான் குற்றச்சாட்டு | Easter Attack Channel 4 Documentary

பிள்ளையானின் பதில் : அசாத் மௌலானா எங்களுடன் இருந்தார். நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக பணியாற்றிய வேளை அவர் எங்களுடன் பணியாற்றினார். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அவர் சில தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டார். இதனையும் ஏனைய கஷ்டங்களையும் சுட்டிக்காட்டிய அவர் வெளியேற விரும்பினார்.

அவர் தற்போது நாட்டில் இல்லை. ஒரே இரவில் செல்வந்தராவதற்காக என்ன செய்ய முடியும். இவ்வாறான போலியான பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிடுவதே அதற்கான ஒரே வழி. எங்களை போல அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை. அவர் எங்களின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலேயே இணைந்தார்.

இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள சனல் 4இன் ஆவணப்படம்: ரணிலின் பதில்

இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள சனல் 4இன் ஆவணப்படம்: ரணிலின் பதில்

அவரால் விடுதலைப் புலிகள் குறித்து எதனையும் தெரிவிக்க முடியாது. இதன் காரணமாக அவர் சர்ச்சைக்குரிய விடயமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பேசியுள்ளார். தற்போது அவர் நாடகமாடுகின்றார், நடிகராக அவர் சிறப்பாக செயல்படுகின்றார்.

சனல் 4 காணொளி விவகாரம்: தீவிரவாதிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் உதவியதாக பிள்ளையான் குற்றச்சாட்டு | Easter Attack Channel 4 Documentary

கேள்வி : இந்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன என்பதற்காக நீங்கள் அவற்றை நிராகரிக்க முடியாது? மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக ராஜபக்சர்கள் இதனை செய்தார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. உங்கள் பதில் என்ன?

மேலும் பலருக்கு இன்று கிடைக்கப்போகும் பணம்: மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மேலும் பலருக்கு இன்று கிடைக்கப்போகும் பணம்: மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பிள்ளையானின் பதில் : மேற்குலகத்தினால் இயக்கப்படும் அரசியல் இயந்திரங்கள் எப்படி செயற்படும் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டமைக்கு யார் காரணம்? மேற்குலகமே காரணம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் அவருக்கு சாதகமாக மாறிய சூழ்நிலை காரணமாக தான் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார் என எவரும் தெரிவிக்க முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் அவரது கட்சியான பொதுஜன பெரமுன உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றது.

சனல் 4 காணொளி விவகாரம்: தீவிரவாதிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் உதவியதாக பிள்ளையான் குற்றச்சாட்டு | Easter Attack Channel 4 Documentary

இதன் அர்த்தம் என்னவென்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாகவே சிங்கள பகுதிகளில் அவருக்கு சாதகமான நிலை காணப்பட்டது. உள்ளூராட்சி தேர்தலுக்கு பிந்தைய தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற வேண்டும் என்பதே முடிந்த முடிவாக காணப்பட்டது.

எனினும் மேற்குலகம் எப்போதும் தனக்கு சார்பானவர்களை இங்கு ஆட்சியில் அமர்த்த விரும்பும். மனித உரிமை பேரவையின் அமர்வுக்கு முன்னதாக சனல் 4 நாடகங்கள் போன்றவை இடம்பெறுவது வழமை. உலகம் எங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து சனல் 4 இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு ஆதரவளித்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு: யாழ். பல்கலை மருத்துவ மாணவர்கள் வருகை (Video)

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு: யாழ். பல்கலை மருத்துவ மாணவர்கள் வருகை (Video)

அவ்வாறான சக்திகள் அசாத் மௌலானாவை அணுகி அவரை பயன்படுத்தியுள்ளன. நான் ஒரு விடயம் குறித்து கவலையடைகின்றேன். சஹ்ரான் ஹாசிமினால் மூளைச்சலவை செய்யப்பட்ட பல இளைஞர்கள் 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சனல் 4 காணொளி விவகாரம்: தீவிரவாதிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் உதவியதாக பிள்ளையான் குற்றச்சாட்டு | Easter Attack Channel 4 Documentary

அவரது தீவிரவாத அமைப்புக்கு விசுவாசமான பலர் உள்ளனர். இன்று அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை. இன்று முக்கியமான விடயத்திலிருந்து கவனத்தை திசை திருப்புவதே இடம்பெறுகிறது. எதிரணி அரசியல்வாதிகள் அரசியல் செய்யக்கூடாது.

அவர்கள் நாட்டின் அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு குறித்து பேசவேண்டும். ஆனால், அவர்கள் நாடாளுமன்றத்தில் அர்த்தமற்ற உரைகளை ஆற்றுகின்றனர். அவர்கள் என் பக்கம் விரல்களை நீட்டுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை நான் சிறையில் இருந்தேன். சிறைக்குள் இருந்தவாறு என்னால் எவ்வாறு பேரழிவு சதித்திட்டத்தை தீட்ட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் 28 நிமிட காணொளி வெளியிட்ட சஹ்ரான்! ஞாபகப்படுத்தும் சரத்வீரசேகர

குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் 28 நிமிட காணொளி வெளியிட்ட சஹ்ரான்! ஞாபகப்படுத்தும் சரத்வீரசேகர

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US