பிள்ளையானை கைவிட்ட இரு பெரும் புள்ளிகள் (Video)
பிள்ளையானினுடைய விவகாரம் தொடர்பில் தங்களை பாதுகாத்துக்கொள்ளவே கோட்டாபய தரப்பு அமைதி காப்பதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்புலத்தில் ஆட்சிபீடம் ஏறியதாக கூறப்படும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிள்ளையானுக்கும் இடையிலான விவகாரம் தொடர்பிலான உண்மைத்தன்மைகள் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ''சனல் 4 விவகாரத்தில் தற்போது பிள்ளையான் தனித்து விடப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக ராஜபக்ச தரப்பில் இருந்து எந்தவித ஆதரவும் இதுவரையில் வெளிவரவில்லை.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் அசாத் மௌலானா தொடர்பில் பிள்ளையான் எந்த வித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை.
இதன் காரணமாகவே அசாத் மௌலானாவின் பின்புலம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகிறது'' என்றார்.
இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரமும் அதனுடன் தொடர்புடைய அசாத் மௌலானாவின் பின்புலம் தொடர்பிலான விடயங்களையும் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 20 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam