கிழக்கு ஆளுநர் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம்
(UNDP) பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத்னசேகரவுக்கும் இடையே, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர்
செயலகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இந்தக கலந்துரையாடலானது நேற்று முன்தினம்(15.07.2026) இடம்பெற்றுள்ளது.
மருத்துவக் கழிவுகளின் முகாமைத்துவம்
இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கையின் சுகாதாரத் துறையில் மருத்துவக் கழிவுகளின் முகாமைத்துவத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான முறையில் வலுப்படுத்துவதற்கான திட்டத்தை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மற்றும் UNDP ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேகரித்தல், கொண்டு செல்லுதல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றல் ஆகியவற்றுக்கான நவீன முறைகளை அறிமுகப்படுத்துதல், எண்ணிம மேலாண்மை அமைப்புகளைப் பயன்படுத்துதல், நிறுவனத் திறன் மேம்பாடு மற்றும் மாகாண அளவில் ஒரு மையப்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையத்தை நிறுவுதல் ஆகியவை குறித்துக் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம், பொது சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், சர்வதேசத் தரங்களுக்கு இணங்க கிழக்கு மாகாணத்தில் உள்ள சுகாதார நிறுவனங்களில் மருத்துவக் கழிவு மேலாண்மையை வலுப்படுத்தவும் தேவையான ஆதரவை வழங்குவதில் UNDP பிரதிநிதிகள் குழு தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan