தென்னிந்திய பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
தென்னிந்திய பெருங்கடலில் மொரீஷியஸ் பிராந்தியத்திற்கு அருகே இன்று பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவிலான பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், இலங்கையின் கடலோரப் பகுதிகளை பாதுகாப்பானது என வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.