நேபாளத்தில் தொடரும் நிலநடுக்கங்கள்...! 100க்கும் மேற்பட்டோர் பலி: அதிகரிக்கும் உயிரிழப்புகள்
நேபாளத்தில் இன்று (05.11.2023) அதிகாலை 4.38 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது காத்மண்டு நகரில் இருந்து வடமேற்கே 169 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிச்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது, மேலும் இது 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்நிலையில், நேற்று நேபாளத்தில் ரிச்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில், ருகும் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்திற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளது.
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan