நேபாளத்தில் தொடரும் நிலநடுக்கங்கள்...! 100க்கும் மேற்பட்டோர் பலி: அதிகரிக்கும் உயிரிழப்புகள்
நேபாளத்தில் இன்று (05.11.2023) அதிகாலை 4.38 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது காத்மண்டு நகரில் இருந்து வடமேற்கே 169 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிச்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது, மேலும் இது 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்நிலையில், நேற்று நேபாளத்தில் ரிச்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில், ருகும் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்திற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
