இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம்! உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஆய்வாளரின் கணிப்பு
லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று(11.02.2023) நில அதிர்வு பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் தொடர்பான தேசிய மையத்தின் தகவலின்படி, இன்று மாலை 03:17 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பதிவான நில அதிர்வுகள்
Earthquake of magnitude 4.2 on the Richter Scale hits Ladakh's Kargil at 3:17 pm; the epicentre of the quake was about 10 km below ground: National Center for Seismology
— Odisha Bhaskar (@odishabhaskar) February 11, 2023
No casualties or damages reported #Earthquake #Kargil #Ladakh pic.twitter.com/RpOxDtIPeX
நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டிடங்கள் உலுக்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். ஆனால் உயிர்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Earthquake of Magnitude:4.2, Occurred on 11-02-2023, 15:17:33 IST, Lat: 37.64 & Long: 76.07, Depth: 10 Km ,Location: 343km N of Kargil, Laddakh, India for more information Download the BhooKamp App https://t.co/gugvb10KZF@Dr_Mishra1966 @Ravi_MoES @ndmaindia @Indiametdept pic.twitter.com/gxTJVCegzq
— National Center for Seismology (@NCS_Earthquake) February 11, 2023
இதேவேளை இன்றைய தினம், இந்தியாவின் - குஜராத் மாநிலத்தில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இன்று காலை அங்கு 3.8 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாலை 12.52 மணியளவில் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சத்தில் மக்கள்
இந்த நிலநடுக்க பதிவுகள் உலக மக்கள் மத்தியில் வியப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியை தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எந்த நாட்டில் ஏற்படும் என்பது தொடர்பில் கடந்த நாட்களில் தகவல் வெளியாகியிருந்தது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பே கணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இந்தியாவிலும் இதேபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.
அடுத்த நிலநடுக்கம் தொடர்பான தகவல்
இந்தியா-பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரான்க் ஹூகர்பீட்ஸ் டுவிட்டர் பதிவு மூலம் முக்கிய எச்சரிக்கை விடுத்திருந்தார்.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க நில அதிர்வுகள் இறுதியில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என்று தெரிவித்திருந்தார்.
Dutch researcher @hogrbe who anticipated the quake in #Turkey and #Syria three days ago had also predicted seismic activity anticipating a large size earthquake originating in #Afghanistan, through #Pakistan and #India eventually terminating into the Indian Ocean. @AlkhidmatOrg pic.twitter.com/qdg4xxREGf
— Muhammad Ibrahim (@miqazi) February 6, 2023
மேலும், அவர் ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இந்த நில அதிர்வு இறுதியில் பாகிஸ்தான், இந்தியாவைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய இந்தியாவில் இன்றைய தினம் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதால் மக்கள் அவருடைய கணிப்புகளை எண்ணி வியப்படைந்துள்ளதுடன் ஏற்பட போகும் அழிவுகள் குறித்து அச்சமடைந்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 23 மணி நேரம் முன்

உலகின் 5 சக்திவாய்ந்த அணுகுண்டுகள் - சில நாடுகளையே நொடிகளில் சாம்பலாக்கும் சக்திகொண்டவை! News Lankasri

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
