நிலநடுக்கங்களுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீர் மருத்துவமனையில் பிறந்த குழந்தை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது அறுவைசிகிச்சை மூலம் குழந்தையொன்று பிறந்துள்ளது.
இது தொடர்பான காணொளியினை வைத்தியரொருவர் தனது அதிகாரப்பூர்வ முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரியின் டுவிட்டர் பதிவின் படி, ஊழியர்களுக்கு தமது பாராட்டுகளையும் மற்றும் கடவுளுக்கு நன்றி" தெரிவித்து டுவீட் செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் பல பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பு தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Emergency operation was going-on at SDH Bijbehara Anantnag during which strong tremors of Earthquake were felt which led to power failure and panic amongst staff, however emergency power back up was initiated and surgery competed#earthquake #earthquakeindia #Anantnag #hospital pic.twitter.com/IoHm7VPa3G
— Aatm Tripathi ?? (@AatmTripathi) March 21, 2023
