ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கங்கள்: அச்சத்தில் அண்டை நாடுகள்
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் இன்று (12.1.2024) காலை 4.51 மணியளவில் ஏற்பட்டுள்ளது
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இந்து குஷ் மலைத்தொடர்
பூமிக்கடியில் சுமார் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நேற்றையதினமும் (11.1.2024) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.50 மணியளவில் 6.4 ரிக்டர் அளவில் இந்து குஷ் மலைத்தொடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான் நகரங்களான காபூல், தகார், லக்மான், குனார் மற்றும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4,000க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததுடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
