இலங்கையில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதற்கான காரணம்! துறைசார் பேராசிரியர் விளக்கம்
இலங்கையில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.
பூமியின் உட்பகுதியில் ஏற்படும் விரிசல்களின் சிறு அசைவுகளே இந்த அதிர்வுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூமிக்குள் இலங்கையின் மையப்பகுதி, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மில்லிமீட்டர்கள் என்ற விகிதத்தில் மிக மெதுவாக உயர்ந்து வருகிறது.
நில அதிர்வுகள்
இதன் காரணமாகவே அதிர்வுகள் ஏற்படுகின்றன. உயரும் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பூமியின் மேலோட்டத்தில் உள்ள கனிம வளங்கள் மூலம் அந்த இடங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிதானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுரங்கப் பணியகம்
அனுராதபுரத்திற்கும் கந்தளாய் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி வவுனியா பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam