பண்டிகை காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் ஈட்டப்பட்டுள்ள வருமானம்
பண்டிகை காலத்தின் 11 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இருந்து 349 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் 1,236,288 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, வெளி வட்ட நெடுஞ்சாலை மற்றும் தெற்கு அதிவேகநெடுஞ்சாலையைப் பயன்படுத்தியுள்ளன.
இந்த காலகட்டத்தில் ஏப்ரல் 10 ஆம் திகதி அதிக எண்ணிக்கையிலான 141,187 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம் மாத்திரம் 38 மில்லியன் ரூபா வருமானமான
ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.