இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையில் ஜனாதிபதி: சாள்ஸ் கவலை
அதே நேரத்தில் மிருசுவில் பகுதியில் பொது மக்களை கொலை செய்த இராணுவ வீரர் தற்போது ஆயுதங்களுடன் பிடிபட்டும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பௌத்த மதகுருவை தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்....
அப்படியான ஒரு சூழ்நிலையில் இன்று சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது, அவர்களுடைய உயிர்களுக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலை இருக்கின்றது.
அவ்வாறான சூழ்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் இன்னும் மௌனம் காப்பது, தமிழர்களுடைய உணர்வுகளை மதிக்காமல் தமிழர்களுடைய எந்த விதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கூடாது என்கின்ற மன நிலையினையே ஜனாதிபதி கொண்டுள்ளதாக தெரிகின்றது என்றார்.