கொழும்பில் அதிகாலை முதல் அடைமழை - போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு
கொழும்பின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலையில் இருந்து அடைமழை பெய்து வருவதாக போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.
கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பத்தரமுல்லை, ராஜகிரிய மற்றும் ஆமர் வீதி ஆகிய பிரதேசங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேல் மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பதாக இன்று காலையில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.