பிரித்தானியாவில் ஒக்ஸ்போட்டில் உணர்வெளிச்சியுடன் ஆரம்பமான மாவீரர்நாள்
உலகப்பரப்பில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் நடைபெறும் மாவீரர் நாள் என்பதில் ஒக்ஸ்போட்டில் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறும் மாவீரர் நாள் முக்கியத்துவம் பெறுகிறது.
மாவீரர் வாரம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து மாவீரர் நினைவெழுச்சி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று இன்று மாவீரர் நாள் புத்தெழுச்சி பெற்றுள்ளது.
மாவீரர் பெற்றோர், மாவீரக்கணவரின் துணைவியர், மாவீரத்தந்தையின் பிள்ளைகள் , மாவீரர் குடும்ப உறவுகள், களங்களில் அவர்களுடன் நின்று களமாடிய நண்பர்கள் உயிரிலும் மேலான தாய்த்தமிழ் சொந்தங்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி விளக்கேற்றும் இத்தருணம் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் மாவீரர் திருமுகங்கள் வந்து நிழலாடிச் சுடர் விட்டெரிவதை அவர்களின் கண்களில் வழிந்தோடும் கண்ணீர்த்துளிகள் வெளிப்படுத்தி நிற்கிறது.





ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri