இந்தியா தொடர்பில் விமல் வீரவன்ச விடுத்துள்ள எச்சரிக்கை

Wimal Weerawansa NPP Government
By Kamal Jul 13, 2025 05:40 PM GMT
Report

நாட்டின் ஈ-தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கான ஒப்பந்தம் இந்தியாவிற்கு வழங்கப்படுவது குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈ-தேசிய அடையாள அட்டை (e-NIC) திட்டத்துக்கான ஒப்பந்தம் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் தனிப்பட்ட தரவுகளை ஆபத்தில் வீழ்த்தும் செயல் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியலாப நோக்கமற்ற நிறுவனமொன்றிடம் ஒப்பந்தம் வழங்கப்படுவதால், இலங்கை பிரஜைகளின் விரல்அடையாளம், கண் விழித்திரை தகவல்கள், முகவரி உள்ளிட்ட தகவல்கள் உள்ளிட்ட மிக நுணுக்கமான பயனாளர் தரவுகள் இந்தியாவுக்கு அனுப்பப்படலாம்," என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணியில் முடிவில் சிக்கப் போவது யார்.. இராணுவத் தளபதிகளுக்கு ஆபத்து ஏற்படுமா!

செம்மணியில் முடிவில் சிக்கப் போவது யார்.. இராணுவத் தளபதிகளுக்கு ஆபத்து ஏற்படுமா!

புரிந்துணர்வு உடன்படிக்கை

2021இல், கடந்த அரசாங்கத்தின் காலத்தில், ஆட்பதிவு திணைக்களமும், இந்திய நிறுவனமும் அதிகாரபூர்வமாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டதாகவும், அது அமுல்படுத்தப்படாமல் இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா தொடர்பில் விமல் வீரவன்ச விடுத்துள்ள எச்சரிக்கை | E Nic Handed To Indian Firm Security Concern

அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம், 2023ம் ஆண்டு 30 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்து திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தது, இப்போது வரை இந்த திட்டத்தின் 99% இற்கும் மேலான தொழில்நுட்ப பகுதி, 500 கோடி ரூபாவினை பயன்படுத்தி இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தேவையான அனைத்து உபகரணங்களும் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன," என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போதைய அரசு உள்நாட்டு திட்டத்தை புறக்கணித்து, இந்தியாவின் தேசிய திறன் தேசிய National Institute for Smart Government (NISG) நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்த நடவடிக்கைகள் முழுவதுமாக இந்தியாவில் நடத்தப்பட்டதாகவும், இலங்கை நிறுவனங்கள் பங்கேற்க முடியாத வகையில், இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும் வீரவன்ச குற்றம்சாட்டினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலாவதியான இரசாயனங்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலாவதியான இரசாயனங்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு 

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய நிறுவனம் மக்கள் நகர்வு, குடியிருப்பு, மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட முக்கிய தரவுகளை அணுகும் உரிமை பெற்றுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா தொடர்பில் விமல் வீரவன்ச விடுத்துள்ள எச்சரிக்கை | E Nic Handed To Indian Firm Security Concern

ஒப்பந்த நிபந்தனைகளின் படி, தரவு கசியும் பட்சத்தில் இந்திய நிறுவனம் 10வீதம் மட்டுமே பொறுப்பேற்கும், என அவர் குற்றம்சாட்டினார்.

இந்திய டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இந்நிகழ்வை ஏற்கனவே அங்கீகரித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

ஆனால் இது எங்கள் தேசிய இறையாண்மைக்கும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் அரசாங்கம் உடனடியாக இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். 

இசாரா செவ்வந்தியின் தாய் சிறைச்சாலையில் மரணம்

இசாரா செவ்வந்தியின் தாய் சிறைச்சாலையில் மரணம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US