பிள்ளைகளின் இணையப் பயன்பாடு குறித்து பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
பாடசாலை பிள்ளைகளுக்கு மின்னஞ்சல்களை திறக்கும் போது பெற்றோரின் விபரங்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் விபரங்களை மின்னஞ்சல் முகவரியை உருவாக்கும்போது உள்ளீடு செய்வதன் மூலம், பிள்ளைகள் எந்தவொரு இணையத்தளத்திற்கும் பிரவேசிக்க சந்தர்ப்பம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமற்ற இணையத்தளங்களுக்கு பிரவேசிக்க முடியாது

பிள்ளைகளின் சரியான விபரங்களை வழங்கும் போது, இணைய தளங்களுக்கு பிரவேசிக்கும்போது பொருத்தமற்ற இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் தடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொலைபேசிகளை பயன்படுத்தும் போது அவை இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டவையா என்பதனை பயனர்கள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவுக்கு உட்படுத்தப்பட்ட தொலைபேசியொன்றை குற்றச் செயலுக்காக பயன்படுத்தினால் அது பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri