மலையக பகுதிகளில் கருவாடு விலைகள் அதிகரிப்பு:ஒரு கிலோ கிராம் நெத்திலி 2000 ரூபா
மலையக பிரதேசங்களில் நெத்திலி கருவாட்டின் விலை மிகவும் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மலையக பகுதிகளில் ஒரு கிலோ கிராம் நெத்திலி கருவாடு ஆயிரத்து 700 ரூபா முதல் 2 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
சூரை கருவாடு ஒரு கிலோ கிராம் 2 ஆயிரத்து 700 ரூபா முதல் 2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ கிராம் உருளை கருவாடு 2 ஆயிரத்து 200 ரூபா முதல் 2 ஆயிரத்து 300 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்ட கருவாடு 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலைகள் காரணமாக உணவுக்காக கருவாட்டை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.
இந்த விலை அதிகரிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள வர்த்தகர்கள், டீசல் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு என்பன காரணமாக கருவாடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
