மலையக பகுதிகளில் கருவாடு விலைகள் அதிகரிப்பு:ஒரு கிலோ கிராம் நெத்திலி 2000 ரூபா
மலையக பிரதேசங்களில் நெத்திலி கருவாட்டின் விலை மிகவும் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மலையக பகுதிகளில் ஒரு கிலோ கிராம் நெத்திலி கருவாடு ஆயிரத்து 700 ரூபா முதல் 2 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
சூரை கருவாடு ஒரு கிலோ கிராம் 2 ஆயிரத்து 700 ரூபா முதல் 2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ கிராம் உருளை கருவாடு 2 ஆயிரத்து 200 ரூபா முதல் 2 ஆயிரத்து 300 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்ட கருவாடு 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலைகள் காரணமாக உணவுக்காக கருவாட்டை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.
இந்த விலை அதிகரிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள வர்த்தகர்கள், டீசல் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு என்பன காரணமாக கருவாடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri