கண்டி சிலத்திலெப்பை பாடசாலையின் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள்
கண்டி சித்திலெப்பை பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களின் போசாக்குத் தேவையை மேம்படுத்தும் வகையில் ஜெர்மனிய முஸ்லிம் ஹெல்ப் அன் நிறுவனத்தினால் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஹசன் மௌலவி நற்பணி மன்றத்தின் அசிசியா பவுண்டேசன் ஏற்பாட்டில் முஸ்லிம் ஜெர்மனி ஹெல்ப் அன் நிதி உதவியுடன் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வுலர் உணவுப் பொருட்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டிருந்ததும் நோக்கத்தக்கது.
நிவாரணப் பொருட்கள்
கண்டி நகரப் பிரதேசத்தில் உள்ள 200 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் கண்டி சித்திலெப்பை பாடசாலையில் அதிபர் ஹலீம் தலைமையில் நேற்று (08.08.2024) வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அசிசியா பவுண்டேசன் பணிப்பாளர் சாதிக் ஹசன் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
நிவாரண பொதியினில் அரிசி, மா ஆகிய பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் 10 கிலோ அரிசி மற்றும் 10 கிலோ கோதுமை மா என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
அனர்த்த நிலமைகள்
அசிசியா பவுண்டேசன் ஊடாக முஸ்லிம் ஜெர்மன் ஹெல்ப் அன் நிறுவனம் பல்வேறு நிவாரண உதவிகளை நாடளவாரீதியில் வழங்கி வருகின்றது.
அனர்த்த நிலைமையின் போதும் பல்வேறு இடங்களில் தங்களின் நிவாரணப் பணிகளில் கைகோர்த்துள்ளதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 200 குடும்பங்கள் கண்டி பகுதியில் பயன்பெற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொருளாதார கஸ்டங்களுக்கு மத்தியில் வாழும் குடும்பங்களின் குடும்பச் சுமையை போக்கும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.