யாழில் கஞ்சா கடத்தல்! மடக்கிபிடித்த இளைஞர்கள் (PHOTOS)
யாழ்ப்பாணம் - பொன்னாலையூடாக கடத்தப்பட்ட சுமார் 350 தொடக்கம் 400 கிலோகிராம் வரையான கஞ்சா பொன்னாலை இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கஞ்சா கடத்தியவர்களில் ஒருவரும் பிடிப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் தப்பியோடியுள்ளனர்.
இவ்வாறு பிடிபட்டவர் பண்டாரவளையை சேர்ந்தவர் எனவும் பண்டத்தரிப்பு - மாதகல் பிரதேசத்தில் திருமணம் செய்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொன்னாலை பரவைக்கடல் ஊடாக கடத்திவரப்பட்ட கஞ்சா, பொன்னாலைச் சந்திக்கும் வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கும் இடையில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றப்பட்டபோதே சிக்கியுள்ளது.

குறித்த வாகனத்தின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த இளைஞர்கள் அதை சோதனையிட முற்பட்டபோதே கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸாரிடம் வாகனத்துடன் கஞ்சாவும்,சந்தேகநபரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |