நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி
ஹங்வெல்ல, தும்மோதர நீர்வீழ்ச்சியில் நீராடச் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (13.08.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்மோதர நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 14 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் உயிரிழந்த நபர் ஹொகந்தர வடக்கு - அரங்கல, மாலபே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஹர்ஷ மதுஷன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீராட சென்ற குறித்த குழுவினர் அதிக மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த இளைஞனின் திடீர் மரண விசாரணை இன்று (14.08.2023) நடைபெறவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
