நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி
ஹங்வெல்ல, தும்மோதர நீர்வீழ்ச்சியில் நீராடச் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (13.08.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்மோதர நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 14 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் உயிரிழந்த நபர் ஹொகந்தர வடக்கு - அரங்கல, மாலபே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஹர்ஷ மதுஷன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீராட சென்ற குறித்த குழுவினர் அதிக மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த இளைஞனின் திடீர் மரண விசாரணை இன்று (14.08.2023) நடைபெறவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
