தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
ஆறு மாத காலத்துக்காக வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நாளை (30.06.2023) வரையான காலப்பகுதியில் வெளியிடப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியான நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சிக்கல்
இந்நிலையில், விசேட தேவையுடையவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பிலான அனுமதியை வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் நேற்றைய தினம்(29.06.2023) இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இலங்கையில் காணப்படும் விசேட தேவையுடைய சுமார் 6 இலட்சம் பேரின் உடல் தகுதி குறித்து கடந்த காலங்களில் மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்காததால், இவர்களின் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சிக்கல் நிலை காணப்பட்டது.
இதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான தற்போதைய சட்டத்தின்படி, எந்தவொரு அரசாங்கப் பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடமும் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் தற்போதுள்ள சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan
