சாரதிகளின் இடமாற்ற கோரிக்கை நியாயமானது : சுகாஷ் தெரிவிப்பு
தாபன விதிக்கோவையின் பிரகாரம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அரச சாரதிகள் இடமாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அரச சாரதிகள் தமது இடமாற்றத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
வழங்கிய உத்தரவாதம்
இந்நிலையில் குறித்த போராட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்த மாதம் முதலாம் திகதி இடமாற்றம் வழங்கப்படுமென்று ஆளுநர் அலுவலகம் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் உடனடியாக இடமாற்றப் பணிகளை ஆரம்பிக்குமாறு கோருகின்றோம்.
சட்டத்தின் பிரகாரம் நீதிக்காகப் போராடும் வட மாகாண அரச சாரதிகளுக்கு எமது பரிபூரண ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri