கலாஓயா வெள்ளத்தில் 68 பயணிகளுடன் சிக்கிய பேருந்து சாரதி கைது
கலாஓயா பாலத்தில் 68 பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெள்ளத்தில் பேருந்தினை செலுத்திய சாரதி, கொலை முயற்சி குற்றச்சாட்டில், இராஜாங்கனை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாலியவெவ, மேல் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சாரதி, கடந்த 27 ஆம் திகதி அனுராதபுரம்-புத்தளம் வீதியில் தனியார் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்றுள்ளார்.
பயணிகளின் உயிருக்கு ஆபத்து
இதன்போது கிராம மக்களின் அறிவுறுத்தல்களை புறக்கணித்து, கலா ஓயா விகாரைக்கு அருகே வெள்ளத்தில் பேருந்தினை ஓட்டிச்சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளத்தில் பேருந்தை செலுத்துவது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்தும் பேருந்தை செலுத்தியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது பேருந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதாகவும், பயணிகளை மீட்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு சம்பவத்தில் பயணி ஒருவரும் உயிரிழந்திருந்தார்.
சம்பவத்தில் பேருவளை, ஹெனவத்தையைச் சேர்ந்த 66 வயதான ஏ.எஸ். முகமது நவாஸ் என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam