விபத்துக்களினால் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று பரவும் அபாயத்தைக் கருத்திற் கொண்டு நாட்டில் விபத்துகு்களை குறைப்பது மிக முக்கியம் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் அல்லாத நோய்கள் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பிரதம சமூக நிபுணர் வைத்தியர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
விபத்துக்களினால் அதிகளவானோர் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறானவர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நாட்டில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு விபத்துகளே பிரதான காரணம் எனவும் வைத்தியர் சமிதா சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.