வடக்கு கடற்றொழிலாளர்களின் குரல் ஏன் கேட்கப்படவில்லை: அர்ச்சுனா ஆதங்கம்
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து தீர்வு காணும் வகையில் எதிர்வரும் 5 வருடங்களுக்கான திட்டம் ஒன்று தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், "வடக்கு மாகாண மக்களின் தேவைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டும் வகையில் இம்முறை இடம்பெறவுள்ள வரவு செலவு திட்டம் குறித்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளேன்.
மேலும், அது தொடர்பான திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றேன். எனவே, விரைவில் எதிர்வரும் 5 வருடங்களுக்கு, வடக்கு மக்களை சார்ந்த திட்டம் ஒன்றினை உருவாக்கி அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri