முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு (Video)

Mullaitivu Trincomalee Douglas Devananda Sri Lanka Economic Crisis Sri Lanka
By Vanniyan Oct 12, 2022 09:57 PM GMT
Report

கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சரின் இந்த பயணத்திற்காக முல்லைத்தீவு கடற்கரை வீதிகளில் அதிகளவு பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதுடன் வீதித்தடையினையும் ஏற்படுத்தி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 06.10.22 ஆம் திகதி முல்லைத்தீவு மீனவர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட தொடர் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


அதிகாரிகளுடன் சந்திப்பு

இந்நிலையில் இன்று (12.10.22) கடற்தொழில் அமைச்சர் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு பயணம் மேற்கொண்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் சுருக்குவலைக்கு ஆதரவான மீனவர்களும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த அமைச்சர்,

தடை செய்யப்பட்ட தொழிலான சுருக்குவலை இங்கு மாத்திரமல்ல திருகோணமலையிலும் நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதும் செய்கின்றார்கள் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.வடமராட்சி கிழக்கிலும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட தொழிலை அமைச்சு ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

ஏற்கனவே இரண்டே முக்கால் இஞ்சி கண்ணுக்கு மேற்பட்ட வலைகள் கரையில் இருந்து 10 கடல்மைலிற்கு மேல் செய்யலாம் என்று இருக்கு தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைக்கு விரைவில் நாங்கள் முடிவினை கொண்டு வருவோம்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு (Video) | Douglas Devananda Visit Mullaitivu

மீனவர்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் அல்ல யாழில்,திருகோணமலையில் இவ்வாறு வேறு பகுதிகளில் நடக்கின்றது.இந்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்போம். மீனவர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கான எரிபொருள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செய்கின்றது. அதில் சில குறைபாடுகளை பார்க்க கூடிவாறு இருக்கின்றது.நான் தனியார் துறைக்கு இறக்குமதிக்கு அனுமதி கொடுக்க சொல்லி கேட்டிருக்கின்றேன்.அனேகமாக அது சரிவரும் என்று நினைக்கின்றேன்.கொக்கிளாய் கடல் நீர் ஏரியில் வெளியிணைப்பு இயந்திரம் பயன்படுத்தி தொழில் செய்வது தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு (Video) | Douglas Devananda Visit Mullaitivu

களப்பு சம்பந்தமான முகாமைத்துவம்

களப்பு சம்பந்தமான முகாமைத்துவத்துடன் கலந்துரையாடி வருகின்றோம்.விரைவில் இந்த ஆண்டுக்குள் முடிவிற்குள் வரும் நந்திக்கடல், நாயாறு,கடல்நீர் ஏரிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு (Video) | Douglas Devananda Visit Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல்,நாயாறு கடல் நீர் ஏரிகள் உள்ளிட்ட கரையோரப்பகுதிகளில் உள்ள களப்பு பகுதிகளையும் அதனை அண்டிய குறிப்பிட்ட தூர பகுதியினையும் மீன்பிடி ஒதுக்குப்பகுதியாக அறிவித்து, அதற்கு புறம்பாக உள்ள பகுதியினையும் வனஜீவராசிகள் திணைக்கள பகுதியாக அறிவித்து இரண்டு பக்கத்தினையும் உள்ள குழு ஒன்றினை அமைத்து அவர்கள் ஒருங்கிணைப்பார்கள் என்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இதேவேளை, திருகோணமலை, கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்றுகூடல் மண்டபத்தை திறந்து வைத்து சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தினை பார்வையிட்ட அமைச்சர் , குறித்த களப்பு பிரதேசத்தினை கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், வனவள ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து முகாமைத்துவம் செய்து களப்பினை பாதுகாப்பதற்கான சாதக பாதகங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆராய்ந்துள்ளார்.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US