பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல்
எதிர்வரும் புத்தாண்டு அல்லது வேறும் விசேட தினங்கள் மற்றும் பண்டிகைகளின் போது கடைநிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்த்து தெரிவிப்பதற்காக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்க வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான விசேட சுற்று நிருபம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி
இவ்வாறான பண்டிகை நாட்களில் உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரிசுப் பொருட்களுடன் வாழ்த்து கூறுவது வழமையாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இனி வரும் காலங்களில் அவ்வாறு பரிசுப் பொருட்களை வழங்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தாம் உள்ளிட்ட ஏனைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்து கூற வேண்டுமாயின் தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி ஊடாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam