யாழ். தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் உதவிகள் வழங்கி வைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஒட்டுசுட்டான் ஜீவநகர் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டு, ஜீவநகர் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பயன்பாட்டிற்கான மலசலகூட கட்டுமானப் பணிக்காக முதலாம் கட்ட நிதி ஆச்சிரமத்தால் வழங்கப்பட்டுள்ளது
மேலும், வவுனியா - கணேசபுரம் கிராமசேவகர் பிரிவிலுள்ள அறநெறிப் பாடசாலையின் கட்டிடம் அமைப்பதற்கான நிதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கலாநிதி மோகனதாஸ்
இந்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம சுவாமிகள் கலாநிதி மோகனதாஸ் அவரது ஆச்சிரம
தொண்டர்களுடன் நேரில் சென்று வழங்கி வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |