டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் கணக்கு முடக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் கணக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காலவரையறையின்றியும் அவர் பேஸ்புக் கணக்கு இடைநிறுத்தப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையின்படி எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடனுக்கு அதிகாரம் மாற்றப்படும் வரை ஜனாதிபதியால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை மேற்கொள்ளமுடியாது.
அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க கெப்பிட்டல் கட்டிடத்தை நேற்று தாக்கிய பின்னர் இந்த இரண்டு சமூக தளங்களும் அவருக்கு 24 மணி நேர தடையை விதித்தன.
ட்ரம்பை பதிவிட அனுமதிப்பதால் ஏற்படும் அபாயங்கள் பாரியவை என்று மிகப் பேஸ்புக்கின் தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.
முன்னதாக கெப்பிட்டல் கட்டிடத்தை தமது ஆதரவாளர்கள் தாக்கிய போது, அவர்களுக்கு தமது பேஸ்புக்கின் ஊடாக ஜனாதிபதி ட்ரம்ப் தமது அன்பை வெளிப்படுத்துவதாக பதிவு ஒன்றை செய்திருந்தார்.
அத்துடன் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக மீண்டும் குற்றம் சுமத்தியிருந்தார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 16 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam