அநுர தொடர்பில் மாற்றத்தை ஏற்படுத்திய ட்ரம்ப்
புதிய இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை, அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் பிழையாக எழுதியுள்ளதாக விமர்சனங்கள் வெளியானதை அடுத்து, மீண்டும் ஜனாதிபதியின் பெயரை திருத்தி எழுதிய கடிதத்தை வெள்ளை மாளிகை தரப்பு வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகை அதிகாரிகளினால், ஜனாதிபதியின் பெயர் அருணகுமார என எழுதப்பட்ட கடிதமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது.
இலங்கையின் மீது 30 வீத வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதத்திலேயே ஜனாதிபதியின் பெயர் அருணகுமார என்று தவறாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அநுரகுமார என்று திருத்திய பெயருடன் மற்றுமொரு கடிதம் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை பிழையாக எழுதியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் பல நாடுகளுக்கு எதிராக வரி விதிப்பு தொடர்பில் அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு பிரத்தியேக கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் மீது 30 வீத வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரபூர்வ கடிதமா...
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதியின் பெயர் அருணகுமார திசாநாயக்க என எழுதப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்படடுள்ளது.
வெள்ளை மாளிகை அதிகாரிகளினால், ஜனாதிபதியின் பெயர் அருணகுமார என எழுதப்பட்ட கடிதமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையினால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத வரி அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வரி 44 வீதமாக அறவீடு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் பெயர் பிழையாக எழுதப்பட்ட விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
எவ்வாறெனினும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வரும் கடிதம் வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ கடிதமா என்பதனை அரசாங்கத் தரப்பு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
