500 ரூபா வரை உயரப் போகும் டொலரின் பெறுமதி..! வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 400 முதல் 500 ரூபா வரை உயர்வதை நிறுத்த முடியாது என நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்களில் டொலரின் விலை குறைவடைந்து வருவது பொருளாதாரம் வலுப்பெறும் சூழ்நிலை காரணமாக அல்ல.
டொலரின் பெறுமதி
மாறாக டொலர் கடனைப் பெற்றுக் கொள்வதன் காரணமாகவே.
ஆனால் கடனை செலுத்த ஆரம்பித்தவுடன் டொலரின் பெறுமதி 400 முதல் 500 ரூபா வரை நிறுத்த முடியாது.
உற்பத்திப் பொருளாதாரத்தில் உண்மையில் டொலரின் விலை குறைய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |