இலங்கையின் எதிர்மறையான வரலாற்றுச் சாதனை

America Government Development Dollar yugadanavi
By Independent Writer Mar 12, 2022 10:18 AM GMT
Independent Writer

Independent Writer

in கட்டுரை
Report

கட்டுரையாளர் - ஜி.ஶ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (மட்டக்களப்பு)

எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம்,  ஆள்புல ஒருமைப்பாடு, சுயாதீனம், சுதந்திரம் மிக்க குடியரசு நாடாக நமது நாட்டை வியாக்கியானப்படுத்துகிறார்கள், மார்தட்டிக்கொள்கின்றார்கள்.

ஆனால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் இறக்குமதிகளைச் செய்வதற்கான டொலருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டொலரைக் கடனாகப் பெறுவதற்கு நிதியமைச்சர் படாதபாடுபடுகின்றார். இறக்குமதி செய்ய வேண்டிய பெற்றோலியம், பால்மா, பருப்பு போன்ற முக்கியமான பொருட்களையே இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரூபாவின் பெறுமதி வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு டொலரோடு ஒப்பிடுகையில் 260 ரூபாவாக அதிகரித்ததையால், ரூபாவின் பெறுமதி மிகவும் குறைந்துள்ளது.

அதுவும் நாளொரு வண்ணமும் ரூபாவின் பெறுமதி தாழ்ந்து கொண்டு செல்கின்றது. எனவே இலங்கை ரூபாய் என்பது நிலையற்ற பெறுமதியுடையதாகவும் எதிர்மறையை நோக்கித் தேய்வதாகவும் காணப்படுகிறது.

தற்போதைய நிலையில் அரசாங்கமே நமது உள்நாட்டு நாணயத்தை மதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. டொலர் என்பது காசுக் கடவுளின் காணிக்கையாகப் பார்க்கப்படுகிறது .காசுக்கடவுளாக அமெரிக்கா நம்மவர்களுக்குத் தெரிகிறது.

அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு எதிராக வீறாப்புப் பேசிய அதிரடி ஆட்சியாளர்கள் சிலர் அடங்கிப் போய் விட்டனர். இந்த நிலையில் நிதியமைச்சர் அவர்கள் அமைரிக்கா சார்பான நிலைப்பாட்டை எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றார்.

மீள்பிறப்பாக்க யுகதனவியத்திட்டத்தில் 41 வீதமான பங்கு அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக டொலரைத் தேடலாம் என்று நிதியமைச்சர் நினைத்துச் செயல்படுகிறார்.

ஆனால் அமைச்சர்களாக இருந்த விமல், கம்மன்பில, வாசுதேவ போன்றவர்கள் யுக தனவிய அமெரிக்க முதலீட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெறவில்லை.

இப்படியான நிலைமையில் ரூபாவின் பெறுமதி இறக்கத்தாலும் டொலரின் பெறுமதி ஏற்றத்தாலும் நாடு பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இறக்குமதிப் பொருட்களுக்கு ரூபாய்களை அரசு கொடுக்க முடியாது.

டொலர்களையே செலுத்த வேண்டும். இதனால் இருபது வீதமான உயர்தர முதலாளித்துவ வர்க்கத்தினர் சுகபோகமாக வாழ்ந்தாலும் 80 வீதமான தொழிலாளர், நடுத்தர வர்க்கத்தினர் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பணவீக்கம் 16.8 ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை வங்காள தேசத்தின் பணவீக்கம் ஆக 5.9 ஆகத்தான் உள்ளது. அங்குந்தான் கோவிட் தாக்கம் இருந்தது, அங்குள்ள நிதி முகாமை எமது நாட்டை விட 3 மடங்கு நன்றாக உள்ளதா? என்று எண்ணத் தோன்றுகின்றது.

புதிய நிதியமைச்சர் வந்தால் எல்லாம் வெற்றியாகி விடும் என்றார்கள். அலாவுதீனின் அற்புத விளக்குடன் வருகிறார் என்றார்கள். 7 ஆவது அறிவும் உடையவர் என்றார்கள், எல்லாம் புஷ்வாணமாகிவிட்டது. பொருளாதாரம் அதல விதல சுதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.

ரூபாயின் பெறுமதி எதிர்மறையாக வரலாறு படைத்துள்ளது.டொலரின் தட்டுப்பாடு,அடிக்கடி அதிகளவில் எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் விலையேற்றம், மக்களுக்கு வருவாய் இல்லை,பொருட்கள் தட்டுப்பாடு, மீண்டும் 367 பொருட்களுக்கு இறக்குமதித்தடை இப்படி நாட்டின் நிலை மோசமாகி விட்டது.

இன்னும் மோசமாகக்கூடிய நிலைமைதான் உள்ளது. எல்லாம் ஆட்சியதிகாரரின் கைகளை மீறித்தான் செல்கிறது.ஆட்சியரின் கையில் இருப்பது தீர்க்கப்படாத பிரச்சினைகள் மட்டுமே தான்.

இனப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பிரச்சினை, சிவில் நிருவாகம் இராணுவமயமாதல் பிரச்சினை, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்று கூறிக் கொண்டே போகலாம்.

மொத்தத்தில் இருந்த பிரச்சினைகள் அப்படியே இருக்க புதிய புதிய பிரச்சினைகள் முளைவிட்டுக் கிளைவிட்டு அதிகரிக்கின்றன. தலையிடிக்கு மருந்தாகத் தலையணைகளை மாற்றுவது போல் அமைச்சர்கள் பதவி மாற்றங்கள் செய்யப்படுகின்றார்கள்.

எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படுவதாக இல்லை. இனவாதம் மதவாதம் அத்துடன் பணம், ஊழல் மோசடிகளால் தேர்தல்களை வென்றுவிடலாம் என்றுதான் அதிகாரர்கள் நினைகின்றார்கள். மாற்றங்கள் எதுவும் இல்லை.ஏமாற்றங்கள் தாராளமாய் உண்டு.

பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள்.எங்கள் பண ரூபாய் உறுதித்தன்மை இல்லாமல் தள்ளாடுகிறது. நாட்டையும் அது தள்ளாட வைக்கிறது.

அதிகார வர்க்க ஆட்சியாளர்களின் சாதனை என்பது எதிர்மறைகளாகவே உள்ளளன. ரூபாவின் பெறுமதி இறக்கம், பண வீக்கம்,பெற்றோலிய விலையேற்றம், இறக்குமதித் தடைப்பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம் போன்றவையே எதிர்மறைச் சாதனைகளாகவுள்ளன.

ஆள முடியாத நிலையில் ஆட்சியாளர்கள், வாழ முடியாத நிலையில் மக்கள் என்ற நிலை நம் நாட்டில் உருவாகி வருகின்றது.

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US