அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! கறுப்பு பட்டியல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
முறையான அனுமதியின்றி நாட்டிலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (29.11.2022) காலை உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
மருத்துவ நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுமுறை காலம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மருத்துவ நிபுணர்களுக்கும் பொருந்தும்.
நாட்டை விட்டு வெளியேறுவோர்
இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடுவோர் தேவையான அனுமதியைப் பெற்று நாட்டைவிட்டு வெளியேற முடியும்.
எனினும் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் சேவையிலிருந்து வெளியேறியவர்களாக கருதப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 14 மணி நேரம் முன்

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
