அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! கறுப்பு பட்டியல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
முறையான அனுமதியின்றி நாட்டிலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (29.11.2022) காலை உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
மருத்துவ நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுமுறை காலம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மருத்துவ நிபுணர்களுக்கும் பொருந்தும்.

நாட்டை விட்டு வெளியேறுவோர்
இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடுவோர் தேவையான அனுமதியைப் பெற்று நாட்டைவிட்டு வெளியேற முடியும்.
எனினும் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் சேவையிலிருந்து வெளியேறியவர்களாக கருதப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri