இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கடுமையாகும் நெருக்கடி நிலை

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
முடங்கும் நிலையில் வைத்தியத் துறை
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அத்தியாவசிய மருந்துகள் இன்மையால் பொதுமக்கள் ஏற்கனவே கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சில வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் பல நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு வைத்தியர்கள் பெருமளவில் வெளியேறுவதென்பது பொதுமக்களை இன்னும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்பதோடு, வைத்தியத்துறை முடங்கும் அபாய நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam