அரசுக்கு எதிராக எந்த ஒரு செயற்ப்பாட்டிலும் ஈடுபட வேண்டாம் - வசந்தா ஹதபான் கொட

Government Akila Viraj Kariyawasam Meeting Podujana Peramuna
By Independent Writer Nov 30, 2021 02:20 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

அரசாங்கத்துக்கு எதிராக எந்த ஒரு செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டாம் என பொது ஜன பெரமுன கல்வி அபிவிருத்தி குழுவின் தலைவி வசந்தா ஹதபான் கொட (Vasantha Hadaban Goda) தெரிவித்துள்ளார்.

பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை மண்டபத்தில் இன்று (30) மாலை இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு விபத்தின் போது உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களை சந்திப்பதற்காக கிண்ணியா பிரதேசத்திற்கு வருகை தந்தபோது மூதூர் மற்றும் கிண்ணியா வலயத்தில் கடமையாற்றும் அதிபர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இவ்விஜயத்தின் போது பதில் கடமையாற்றும் அதிபர்களின் மேலதிக கொடுப்பனவு, பதில் கடமையாற்றும் அதிபர்களை நிரந்தரமாக்குதல், 2019 ஆம் ஆண்டு பரீட்சையில் தோற்றி முறையற்ற விதத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு அதிக புள்ளிகளை வழங்கி மஹிந்த அணியினர் என புறக்கணிக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் ஆராய்வதற்கு வருகை தந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் இலங்கை ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் அதிபர் ஆசிரியர் சம்பள உயர்வானது வழங்கப்பட இருந்த சுபோதினி அறிக்கையின் பிரகாரம் முழுமையாக பெற முடியாமல் தற்போது மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏனைய பிரதேசங்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ள அதிபர்களுக்கான மேலதிக கொடுப்பனவு வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மாத்திரம் வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகளின் தெளிவின்மையே இதற்கு காரணம் எனவும் பொது ஜன பெரமுன கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவி வசந்த ஹதபான் கொட இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அரசாங்கத்திற்கு எதிரான எந்த ஒரு செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் நாட்டை முன்னோக்கி செல்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US