ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம்! ஊழியர்களுக்கான அவசர அறிவித்தல்
நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் சேவையாற்றும் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
உணவு மற்றும் பானங்களை அருந்தும் போது முககவசத்தை கழற்ற வேண்டும் என்பதால், பலர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதால், கோவிட் 19 வைரஸ் பரவலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது அலுவலகங்களில் பணிப்புரிவோர் தமது பணியிடங்களில் முககவசம் அணிதல், இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
இதனை தவிர பணியிடங்களில் இருப்போரின் உடல் உஷ்ணத்தை பரிசோதிக்க தேவையான வசதிகளை நிறுவனங்களின் பிரதானிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam