கண்ட கண்ட இடங்களில் அரசை விமர்சிக்காதீர்! - பங்காளிகளிடம் பீரிஸ் வேண்டுகோள்
"அரசின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதற்கு பங்காளிக் கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால், அந்த உரிமையைப் பொருத்தமான இடத்திலேயே பயன்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக்கொண்ட கட்சிகள், பொதுவானதொரு இலக்கை அடைவதற்காகப் பொதுவானதொரு வேலைத்திட்டத்தின் கீழ் இணைவது தான் கூட்டணி அரசாகும். அங்கு கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இருக்க வேண்டியது ஜனநாயகப் பண்பாகும்.
பயணம் தவறெனில் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பங்காளிகளுக்கு இருக்கின்றது. அதற்காக ‘மைக்’ கிடைக்கும் இடங்களில் எல்லாம் பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை வெளியிடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.
நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கூட்டம்
நடைபெறும். அமைச்சரவைக் கூட்டமும் இடம்பெறும். அப்போது விமர்சனங்களை
முன்வைக்கலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம்.
அதனைவிடுத்து கூட்டுப் பொறுப்பை மீறும் வகையில் பொதுவெளியில் விமர்சங்களை
முன்வைப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan