இலங்கை இராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி வேண்டாம்! - இந்திய இராணுவத்திடம் கோரிக்கை

India Army Sri Lanka Velmurugan
By Murali Oct 16, 2021 10:50 PM GMT
Report

 இலங்கை இராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை இந்தியா இராணுவம் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்திய இராணுவ தளபதி எம்.எம்.நரவனே கடந்த 13.10.2021 அன்று, இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஆகியோரை சந்தித்து பேசிய எம்.எம்.நரவனே, இரண்டு நாட்டு உறவு குறித்தும், கடல் பாதுகாப்பு குறித்து, இராணுவ போர் இணை பயிற்சி குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், ஆண்டுதோறும் இலங்கை இராணுவத்தை சேர்ந்த 1,000 பேருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிக்கவும், கூடுதலாக 50 இராணுவ அதிகாரிகளுக்குச் சிறப்பான பயிற்சி அளிக்கவும் இப்பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2009-ல், சிங்களப் பேரினவாத அரசால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பு போரில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குழந்தைகள் என்றும் பாராமல் ராணுவ வாகனங்கள் ஏற்றிக் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானர்கள். இப்படியான துயரங்கள் அரங்கேறி 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமிழர்களுக்கான நீதி இன்று வரை கிடைக்கவில்லை.

ஆனாலும், நீதி கிடைத்திடும் என்ற நம்பிக்கையில் ஐ.நா வாசலில் நின்று கொண்டிருக்கிறோம். அதோடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க துணை நிற்க கோரி இந்திய அரசிடம் வேண்டி நிற்கிறோம்.

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், இலங்கை அரசுடன் இராணுவ ஒத்துழைப்பை இந்திய அரசு மேற்கொள்வது எந்த விதத்தில் நியாயம். இலங்கை கடற்படையால் நாள்தோறும் தமிழ்நாட்டு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் அழுகுரலை எல்லாம் காது கொடுத்து கேட்காத இந்திய அரசு, சிங்கள பேரினவாத அரசுடன் நல்லுறவை பேணுவது வேதனை அளிக்கிறது.

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சி அளிப்பது என்பது மிச்சம் மீதி இருக்கிற ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகவே முடியும்.

ஏற்கனவே, ஈழப்பகுதிகளில் மீண்டும் ஒரு எழுச்சி வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், ஏராளமான மதுக்கடைகளை திறந்தும், விபச்சார விடுதிகளையும் திறந்தும் தமிழ் இளைஞர்களை சீரழித்து வருகிறது சிங்களப் பேரினவாத அரசு.

எனவே, போர்க்குற்றவாளியான இலங்கை அரசுடன் ஒத்துழைப்பை பேணுவதை விடுத்தும், அந்நாட்டு ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு கைவிட வேண்டும்.

மேலும், போர்க்குற்றவாளியான ராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க இந்திய அரசு முன் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US