அரசாங்கத்தினர் வெளியிடும் கருத்துக்களால் அநாதரவாகியுள்ள மக்கள்! எல்வே குணவங்ச தேரர்
ஊடகங்களை நோக்கும் போது அரசாங்கம் செல்லும் வழியை தெளிவாக காணக்கூடியதாக இருப்பதாகவும் ,அரசாங்கம் கூறும் ஒரு வார்த்தையிலும் நம்பிக்கையில்லை எனவும் எல்வே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான கப்பல் குறித்து வெளியிட்ட விடயங்களில் இது மிகவும் தெளிவாக தெரிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக நாட்டின் இதயம் போன்ற கொழும்பு கோட்டையில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய மேற்கொண்டுள்ள திட்டங்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அரச வளங்களை இப்படி விற்பனை செய்வதால், எதிர்கால சந்ததிக்கு நாடு இல்லாமல் போய்விடும்.
ஒரு சட்டம், ஒரு நாடு பற்றி பேசினாலும் அரசாங்கத்தினர் வெளியிடும் கருத்துக்களால் மக்கள் அநாதரவாகியுள்ளனர் எனவும் எல்லே குணவங்ச குறிப்பிட்டுள்ளார்.
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam