திருகோணமலை மாவட்ட விவசாயிகளுடன் இம்ரான் எம்.பி சந்திப்பு
திருகோணமலை (Trincomalee) மானாண்டான் குளம் பகுதில் வாழ்ந்த பொதுமக்களின் பூர்வீக காணிகளை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்குரிய பல்வேறு முன்னெடுப்புகள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் ஒரு அங்கமாக நேற்று (22) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியை மானாண்டான் குளம் விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் அழைத்து சென்று தீர்வினை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
காணி அனுமதிப் பத்திரம்
இதன்போது திருகோணமலை முத்துநகர் மானாண்டகுளம் பகுதியில் சுமார் 1970ஆம் ஆண்டில் இருந்து 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாகவும், அங்கே அவர்களின் வாழ்வாதார நிலத்தில் விவசாயம் செய்து வந்ததாகவும், அவர்களில் பலபேருக்குக் காணி அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
சில பேருக்குப் பதிவு செய்து பின்னர் வழங்குவதாக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளரால் விபரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், அக்காணியினை தற்பொழுது வன பாதுகாப்பு திணைக்களம் தங்களுடைய காணியாக கூறி வருவதாகவும் அக் காணியினை மீண்டும் பெற்று விவசாயத்தினை மேற்கொள்வதற்கும் அனுமதி பெற்றுத்தருமாறு மானாண்டான் குளக் கிராமத்தில் வாழ்ந்த பொது மக்களினால் சில நாட்களுக்கு முன்பு கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
