மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம் - விசேட வர்த்தமானி வெளியானது
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஹமீட் மொஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதி விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் பாவனையிலிருந்ததாகக் கூறப்படும் ஓர் உழவு இயந்திரம் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சமயம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அது பிரதேச சபைக்குரியது எனத் தவறாக உரிமை கோரும் கடிதம் வழங்கி நீதிமன்றிலிருந்து உழவு இயந்திரத்தை விடுவித்து அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைப்பாடு தொடர்பில் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் உள்ளுராட்ச்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் பரிந்துரைக்கு அமையக் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய செப்ரெம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் ஆகிய பதவிகள் வெறிதாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam