சப்ரகமுவ பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல்
சப்ரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக கடந்த 11ஆம் திகதி மாகாணசபை கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மாகாண ஆளுநர் ஜானகிராஜரத்ன மற்றும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார இரத்னபுரி/ கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண கல்வி பணிப்பாளர்கள் கல்வி அமைச்சின் செயலாளர் வலையக்கல்வி பணிப்பாளர்கள் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலின் போது சப்ரகமுவ மாகாணத்தில் மாகாணத்தில் 2500 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது தொடர்பாகவும், இதன்போது தமிழ் மொழி மூலம் 700 பட்டதாரிகளும், சிங்கள மொழி மூலம் 1800 பட்டதாரிகள் உட்பட தமிழ் மொழி மூலமான பட்டதாரிகள் முகம் கொடுக்கின்ற நடைமுறை சிக்கல்கள் அவர்களுக்கான பாரபட்சம் காட்டுதல் இவர்களை இணைத்துக் கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், பாடநெறி அடிப்படையில் அவர்களின் நியமனங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் பதவி உயர்வு மொடியுள் சம்பந்தமாகவும் பாடசாலைகளில் காணப்படும், அதிபர் வெற்றிடங்கள் தற்காலிக அதிபர்கள் தொடர்பான விடயங்கள், பாடசாலைகளில் முறைசாரான நிதி சேகரிப்புகள் பதவி உயர்வுகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதோடு அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும், கலந்து கொண்டிருந்த அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.






விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
