எரிவாயு வெடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க கலந்துரையாடல்: செய்திகளின் தொகுப்பு(Video)
எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நாளை மறுதினம் கலந்துரையாடப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் பதிவாகியுள்ளன. எரிவாயு, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போதியளவு பொருட்கள் வழங்கப்படாமையால் சந்தை பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,