வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம்: வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (24.12.2025) மாலை முன்னெடுக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவினை பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பலருக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுத்தி உத்தியோகத்தர்களுக்கு எதிராக பதாதைகளை தாங்கி இருந்ததோடு கோசங்களையும் எழுப்பி இருந்தனர்.
அத்துடன், ஊழலை ஒழிப்பதாக கூறிய அரசாங்கத்திற்கு நாம் வாக்களித்தோம். முன்னைய காலங்களைப் போல் அல்லாமல் பாரபட்சமற்ற முறையில் குறித்த நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன் வைத்திருந்தனர்.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri