நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority), மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையின் விசேட சோதனை மற்றும் விசாரணைகளின் பணிப்பாளர் சஞ்சய் வீரசிங்க கூறுகையில்,
இந்நாட்களில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதால், தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

தள்ளுபடி பொருட்களில் சிக்கல்
இவ்வாறான பண்டிகைக் காலங்களில் தள்ளுபடி பொருட்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விலையில் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், ஆதாரங்களுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam