பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு விசேட தள்ளுபடி
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு விசேட தள்ளுபடியை வழங்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக்குழு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேற்படி குழுவின் தலைவரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் மான்னப்பெரும, நேற்று (22) இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், பொலித்தீன் பைகளை எடுத்துச்செல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி வழங்குவதற்கு முக்கிய விற்பனை நிலைய (சுப்பர் மார்க்கெட்) உரிமையாளர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதேவேளை, பிளாஸ்டிக் போத்தல்களில் கியுஆர் குறியீட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசிப்பதற்காக சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்கள் மற்றும் நீர் மற்றும் பான உற்பத்தியாளர்கள் குழுவின் முன்னிலையில் கடந்த 2 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam